/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/எட்டயபுரம் கூட்டுறவு சங்க பாங்க்கில்துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சிஎட்டயபுரம் கூட்டுறவு சங்க பாங்க்கில்துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி
எட்டயபுரம் கூட்டுறவு சங்க பாங்க்கில்துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி
எட்டயபுரம் கூட்டுறவு சங்க பாங்க்கில்துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி
எட்டயபுரம் கூட்டுறவு சங்க பாங்க்கில்துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி
ADDED : ஜூலை 13, 2011 02:34 AM
எட்டயபுரம்:எட்டயபுரம் அருகே கூட்டுறவு சங்க பாங்க்கில் துப்பாக்கியுடன்
வந்த மர்ம ஆசாமிகள் அதிகாரியை மிரட்டி பணம், நகை பறிக்க முயற்சி செய்தனர்.
சம்பவ இடத்தில் தூத்துக்குடி எஸ்.பி.,நேரில் வந்து விசாரணை நடத்தி மர்ம
ஆசாமியை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்தார்.எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை
கிராமம் உள் ளது. இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக
அரசுக்கு சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு
கோவில்பட்டி கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தை சேர்ந்த ஆடிட்டர்
தாமோதரன்(52) கூட்டுறவு கடன் சங்க கணக்குகளை தணிக்கை செய்து
கொண்டிருந்ததார். இங்கு பணிபுரிந்து வரும் சிந்த லக்கரை தொடக்க கூட்டுறவு
கடன் சங்கத்தின் செயலாளர் ராமமூர்த்தி பணி நிமித்தமாக கோவில்பட்டிக்கு
சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் இரண்டு சேல்ஸ்மேன்களு ம் வெளியே
சென்றுவிட்டனர். மதியம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகக்
காணப்பட்டது. ஆடிட்டர் தாமோதரன் மட்டும்தான் அலுவலகத்தில் கணக்குகளை
சரிபார் ப்பதில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் ஆசாமிகள் 2
பேர் வந்தனர். இவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். மற்றொருவர்
முகத்தை துணியால் மூடிக்கொண்டு பாங்கிற்குள் நுழைந்தனர். இதில் 2 பேரும்
துப்பாக்கி வைதிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆடிட்டர் தாமோதரன்
எழும்பினார். மர்ம ஆசாமி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகை, பணம், சாவிகளை
கேட்டனர். அதற்கு அவர் நான் கணக்குகளை தணிக்கை செய்யவ ந்துள்ளேன் எனக்கு
வேறு எதுவும் தெரியாது என கூச்சலிட்டுள்ளார். இந்த கூச்சல் சத்தத்தில்
துப்பா க்கிகாட்டி மிரட்டிய 2 ஆசாமிகளும் அங்கிருந்து தலைமறைவாகினர். இது
குறித்து ஆடிட்டர் தா மோதரன் எட்டயபுரம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
சம்பவ இத்திற்கு எஸ்.பி.நரேந்திரநாயர், கோவில்பட்டி
டி.எஸ்.பி.சிலம்பரசன்தலைமையிலான போலீஸ் குழுவினர் அங்கு சென்று விசாரணை
நடத்தினர். துப்பாக்கியை வைத்து மிரட்டி சென்ற ஆசாமியை பிடிப்பதற்காக
எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் பொன்பால்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.


