நெருக்கடி கால ஆவணங்கள்: டில்லி கோர்ட் தடை
நெருக்கடி கால ஆவணங்கள்: டில்லி கோர்ட் தடை
நெருக்கடி கால ஆவணங்கள்: டில்லி கோர்ட் தடை
ADDED : ஜூலை 13, 2011 04:54 AM
புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டப்படி இந்தியாவின் நெருக்கடி நிலைமை குறித்த அனைத்து ஆவணங்களை வெளியிட ஜனாதிபதி அலுவலகத்திற்கு தகவல் கமிஷன் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது தொடர்பான வழக்கில் டில்லி ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 1975-ம் ஆண்டு இந்திரா பிரதமராக பதவி வகித்த போது நெருக்கடி நிலைமை(எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது இந்தியாவின் குடியரசுத்தலைவராக (ஜனாதிபதியாக) பக்ரூதின் அலி அகமது பதவி வகித்தார். நெருக்கடி நிலைமையால் நாடு முழுவதும் முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஊடகங்கள் செய்தி வெளியிடுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுபாஷ் சந்திரா அகர்வால் என்பவர், மத்திய தகவல் கமிஷனரிடம் மனு அளித்தார். அதில் இந்தியாவில் நெருக்கடி நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது குறித்து ,அப்போதைய பிரதமர் இந்திரா, ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமது ஆகியோரிடையே நடந்த தொடர்பு முறைகள் குறித்த அனைத்து ஆவணங்களின் தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டப்பட்டி வெளியிட , ஜனாதிபதி மாளிகைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக சி.ஐ.சி. ஜனாதிபதி மாளிகை செயலருக்கு வரும் 15-ம் தேதி்க்குள் அனைத்து ஆவணங்களின் தகவல்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி மாளிகை குறித்த ஆவணங்களை வெளியிட முடியாது என்றும், அரசியலைப்பு சட்டம் 74- ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், சி.ஐ.சி.க்கு சில எல்லை முறைகள் உண்டு எனவும் ஜனாதிபதி மாளிகையின் தகவல் தொடர்பு அலுவலர் தெரிவித்தனர். இது தொடர்பான டில்லி ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ராஜிவ்ஷகாய் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய தலைமை தகவல் கமிஷனரின் உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


