ADDED : ஜூலை 14, 2011 12:06 AM
திண்டிவனம் : திண்டிவனம் புனித அன்னாள் பள்ளி மாணவர்களுக்கு மனவளக் கலை அறக்கட்டளை சார்பில் யோகா பயிற்சி நடந்தது.
திண்டிவனம் புனித அன்னாள் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி முகாம் நடந்தது. தலைமையாசிரியர் பீட்டர் ராஜேந்திரம் தலைமை தாங்கினார். ஏழு நாட்கள் தினமும் ஒரு மணிநேரம் பயிற்சியளிக்கப்படுகிறது. திண்டிவனம் மனவளக்கலை அறக்கட்டளை தலைவர் ஆசைத்தம்பி, செயலர் ஜெகன்நாதன், அறங்காவலர் நடராஜன் பயிற்சியளித்தனர்.


