ADDED : ஜூலை 14, 2011 12:11 AM
விழுப்புரம் : இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய கணினி ஆப்ரேட்டர் காணாமல் போனார்.
விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்த தண்டபானி மகன் ரவி(33). இவர் விழுப்புரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கணினி ஆப்ரேட்டராக பணி புரிந் து வந்தார். கடந்த 11ம் தேதி பணிக்கு சென்ற இவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை. விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


