ADDED : ஜூலை 14, 2011 12:25 AM
புதுச்சேரி : சிறப்பு ஒலிம்பிக்ஸ் 2011 வாலிபால் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த சாதனை சிறுவன் சந்தோஷ்குமாரை அமைச்சர் ராஜவேலு பாராட்டினார்.புதுச்சேரி அரசு சமூக நல இயக்கம் கீழ் இயங்கி வரும் மனவளர்ச்சி குன்றிய சிறுவர் இல்லத்தில் தங்கி பயின்று வரும் சந்தோஷ்குமார் உலக அளவிலான சிறப்பு ஒலிம்பிக்ஸ் 2011க்கு, வாலிபால் போட்டில் இந்திய குழுவில் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் கீரீஸ் தலைநகர் ஏதென்சில் கடந்த மாதம் நடந்த போட்டியில் பங்கேற்று உலக அளவில் மூன்றம் இடத்தைப் பிடித்துள்ளார். உலக அளவில் சாதனை படைத்த மாணவர் சந்தோஷ்குமாரை அமைச்சர் ராஜவேலு பாராட்டினார்.நிகழ்ச்சியில் சிறப்பு செயலர் தேவநீதிதாஸ், பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


