/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/18ம் தேதி முதல் பள்ளி புறக்கணிப்பு: சண்முகபுரம் மாணவர்கள் அறிவிப்பு18ம் தேதி முதல் பள்ளி புறக்கணிப்பு: சண்முகபுரம் மாணவர்கள் அறிவிப்பு
18ம் தேதி முதல் பள்ளி புறக்கணிப்பு: சண்முகபுரம் மாணவர்கள் அறிவிப்பு
18ம் தேதி முதல் பள்ளி புறக்கணிப்பு: சண்முகபுரம் மாணவர்கள் அறிவிப்பு
18ம் தேதி முதல் பள்ளி புறக்கணிப்பு: சண்முகபுரம் மாணவர்கள் அறிவிப்பு
திசையன்விளை : சண்முகபுரம் தொடக்க, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வரும் 18ம் தேதி முதல் பள்ளியை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-திசையன்விளை டவுன் பஞ்.,சிற்குட்பட்ட சண்முகபுரத்தில் பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளி நடந்து வந்தது.
இப்பள்ளி நடைபெற்று வரும் இடத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட போதிய இடவசதி இல்லாததால் திசையன்விளை டவுன் பஞ்.,சிற்கு சொந்தமான இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்ட 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கி திசையன்விளை டவுன் பஞ்.சில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப்பட்டு கடந்த பிப்.28ம் தேதி அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. ஆனால் இந்த இடத்தில் இதுவரை புதிய கட்டடம் கட்ட ஆரம்பிக்காததால் மாணவ, மாணவிகள் படிக்க போதிய இடவசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக கட்டட பணி தொடங்காததை கண்டித்து வரும் 18ம் தேதி முதல் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி செல்வதை புறக்கணித்துவிட்டு ஊர் பொதுமக்களின் ஆலோசனைபடி அனைவரும் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக சண்முகபுரம் ஊர் பொதுமக்கள் மனுவில் கூறியுள்ளனர்.


