/உள்ளூர் செய்திகள்/சேலம்/உருவபொம்மை எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்புஉருவபொம்மை எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு
உருவபொம்மை எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு
உருவபொம்மை எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு
உருவபொம்மை எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு
ADDED : ஜூலை 14, 2011 01:36 AM
பெருந்துறை: முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடும்பாவி எரிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவை 2007 ஜூன் 7 ம் தேதி விமர்சித்து பேசியதாக, கருணாநிதி கொடும்பாவியை எரித்தாக, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை, எம்.எல்.ஏ., வெங்கடாசலம் உள்பட அ.தி.மு.க.வினர் 47 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2009 நவம்பர் 6 ம் தேதி குற்ற பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இவ்வழக்கு பெருந்துறை உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இவ்வழக்கில் நேற்று முன் தினம், அரசு வக்கீல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வக்கீல்களுக்கு இடையே விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பின் நீதிபதி ரவி, 14ம் தேதி தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.


