/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தொலை முறை கல்வி தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடுதொலை முறை கல்வி தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு
தொலை முறை கல்வி தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு
தொலை முறை கல்வி தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு
தொலை முறை கல்வி தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு
ADDED : ஜூலை 14, 2011 09:24 PM
காரைக்குடி : அழகப்பா பல்கலை தொலைமுறை கல்வி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மே மாதம் - 2011ல் நடந்த (பி.பி.ஏ., அதில் நேரடி இரண்டாமாண்டு), பி.ஏ., (பொது நிர்வாகவியல்), பி.எஸ்.சி., (தகவல் தொழில்நுட்பம், அதில் நேரடி இரண்டாமாண்டு, கம்ப்யூட்டர் அறிவியல், அதில் நேரடி இரண்டாமாண்டு) எம்.சி.ஏ., அதில் நேரடி இரண்டாமாண்டு, எம்.எஸ்.சி.,(கம்ப்யூட்டர் அறிவியல், இயற்பியல்), எம்.பி.ஏ., (ஐந்தாண்டு, வங்கி மற்றும் நிதியியல், கல்வியியல் மேலாண்மை), எம்.எல்.ஐ.எஸ்., பி.ஜி.டி.சி.ஏ., நிறுமச் செயலரியல் டிப்ளமோ மற்றும் எம்.பில்( நிறுமச் செயலரியல்) பாடப்பரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை மாணவர்கள், 'www.kalvimalar.com,'' மற்றும் 'www.alagappauniversity.ac.in ' என்ற 'வெப்சைட்டில்' காணலாம். முடிவு வெளியான 15 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலை இணையதளத்தில் பெறலாம். மறுமதிப்பீட்டிற்கான கட்டணம் (எம்.பில்., நீங்கலாக) ரூ. 400 டி.டி., எடுத்து தேர்வு பிரிவுக்கு அனுப்புமாறு, பல்கலை தேர்வாணையர் மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார்.


