Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/2வது திருமணம் செய்த பெண் போலீஸின் கணவன் கைது

2வது திருமணம் செய்த பெண் போலீஸின் கணவன் கைது

2வது திருமணம் செய்த பெண் போலீஸின் கணவன் கைது

2வது திருமணம் செய்த பெண் போலீஸின் கணவன் கைது

ADDED : ஜூலை 14, 2011 11:31 PM


Google News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இரண்டாவது திருமணம் செய்த, பெண் போலீஸின் கணவனை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி அவதானப்பட்டி தாசன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் இளவரசி (26). கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் போலீஸாக பணிபுரிந்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ராகுல் (26) என்பவரும் காதலித்து, 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், ராகுல் அவரது தந்தை மாணிக்கராஜ், தாய் தங்கமணி ஆகியோர் இளவரசியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, வீட்டை விட்டு துரத்தினர். இரு மாதத்துக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை ராகுலுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த இளவரசி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா விசாரித்து ராகுலை கைது செய்தார். தலைமறைவாகவுள்ள மாணிக்கராஜ் மற்றும் தங்கமணி, ராகுலின் இரண்டாவது மனைவி சரண்யா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us