அறிவியல் ஆயிரம்
விவசாயக் காலம்
தமிழகத்தில், நடவு வேலைகள் துவங்கி விட்டன.
தகவல் சுரங்கம்
ஆடைகளுக்கான அருங்காட்சியகம்
இந்தியாவில் துணி உற்பத்தி, ஆடை கலாசாரம் பல நூற்றாண்டு கால பாரம்பரியம் உடையது. இந்தியாவில் துணி உற்பத்தி, பருத்தி துணியில் இருந்து துவங்கியது. இந்தியாவில் துணி உற்பத்தி சாதனைகளையும், அதன் வரலாற்றையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில், 'ஆடைகளுக்கான அருங்காட்சியகம்' ஆமதா பாத்தில் செயல்பட்டு வருகிறது. குஜராத்தின் ஆமதாபாத் ஆடை தொழில்களுக்கு ஏற்ற நகரம் என்பதால், இந்த அருங்காட்சியகம் அங்கே துவங்கப்பட்டது. விடுதலை அடைந்தவுடன் 1949லேயே இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. சாராபாய் அறக்கட்டளை இந்த அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் வன்முறைச் செயல்கள் எதுவும் இடம் பெறாமல் நடைபெற்ற துணி ஆலைத் தொழிலாளர் சத்யாகிரகம் ஆமதாபாத்தில் தான் நடந்தது. அப்போது அம்பாலால் சாராபாய் என்பவரை எதிர்த்து தான் அந்த சத்யாகிரகம் நடந்தது. இருதரப்பிற்கும் வெற்றியாக வித்தியாசமான முறையில் அந்தப் போராட்டம் நிறைவு பெற்றது. அந்த அம்பாலால் சாராபாய் அறக்கட்டளை நிறுவனமே, இந்த அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறது.


