/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசு மழை : சுற்றுச்சூழலை காக்க வனத்துறை திட்டம்மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசு மழை : சுற்றுச்சூழலை காக்க வனத்துறை திட்டம்
மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசு மழை : சுற்றுச்சூழலை காக்க வனத்துறை திட்டம்
மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசு மழை : சுற்றுச்சூழலை காக்க வனத்துறை திட்டம்
மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசு மழை : சுற்றுச்சூழலை காக்க வனத்துறை திட்டம்
திண்டுக்கல் : மாவட்டத்தில் உள்ள தனியார் நிலங்களில், இந்த ஆண்டு, 80 ஆயிரம் மரங்கள் வளர்க்க, வனத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
தனியாருக்கு அனுமதி : சந்தனம், தேக்கு, ஈட்டி, தோதகத்தி, சில்வர் ஓக் போன்ற 'பட்டியல்' மரங்களை, தனியார் வளர்க்க, வனத்துறை முன்பு அனுமதிப்பதில்லை. மாசுபடும் சுற்றுச்சூழலை காப்பதற்காக, இம்மரங்களையும் தனியார் வளர்க்க, தற்போது அனுமதி வழங்கியுள்ளது. 'தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டம்' மூலம் விவசாயிகள், சொந்த நிலம் வைத்திருப்போருக்கு, கன்றுகளை இலவசமாக வழங்க, வன விரிவாக்க மையம் தயாராக உள்ளது. 80 ஆயிரம் மரங்கள்: திண்டுக்கல்லில், 2011-12 ஆண்டுக்கு, வன விரிவாக்க மையம் சார்பில், 80 ஆயிரம் மரக்கன்றுகளை தனியார் பட்டா நிலங்களில் வளர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 200 கன்றுகள் என, ஐந்து ஏக்கர் வரை 1,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். அக்கன்றுகளை நல்ல முறையில் வளர்க்க, ஏக்கருக்கு 1,000 மானியம் கிடைக்கும். நடவு கூலி தனியாக வழங்கப்படும். செயல் விளக்க தோட்டங்கள் அமைக்க தனியார் நிலங்களை, வன விரிவாக்க மையம் தேர்வு செய்து வருகிறது. ஒரு விவசாயிக்கு, இரண்டரை ஏக்கர் வரை, மரக்கன்றுகள் வழங்கி, வனத்துறை சார்பில் நடப்படும்.
காத்திருக்கு:மாவட்டத்தில் கடந்த ஆண்டு, ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதில், 85 சதவீதம் நன்கு வளர்ந்திருப்பதாக, வன விரிவாக்க மையம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு 80 ஆயிரம் கன்றுகள் நடப்படவுள்ளன. இதற்காக, பட்டா நிலம் வைத்திருப்போரிடம் இருந்து விண்ணப்பம் பெறப்படுகிறது. தரிசு நிலங்களில் வறட்சியை தாங்கக்கூடிய தேக்கு, பீனாரி, வேம்பு, வேங்கை, இலவம் கன்றுகள் விற்பனைக்கும், இலவசமாகவும் கிடைக்கும். மரக்கன்றுகளை நன்றாக பராமரித்தவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தலா 10,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். சுற்றுச்சூழலை காக்க மரம் வளர்ப்போருக்கு, 'பரிசு மழை' காத்திருப்பதாக, வனத்துறை அறிவித்துள்ளது.


