/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வை கண்டு கொள்ளாத அரசு பஸ் டிரைவர் : தீராத 16 ஆண்டுகால பிரச்னைஅ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வை கண்டு கொள்ளாத அரசு பஸ் டிரைவர் : தீராத 16 ஆண்டுகால பிரச்னை
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வை கண்டு கொள்ளாத அரசு பஸ் டிரைவர் : தீராத 16 ஆண்டுகால பிரச்னை
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வை கண்டு கொள்ளாத அரசு பஸ் டிரைவர் : தீராத 16 ஆண்டுகால பிரச்னை
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வை கண்டு கொள்ளாத அரசு பஸ் டிரைவர் : தீராத 16 ஆண்டுகால பிரச்னை
தேவகோட்டை : தேவகோட்டையில் குறிப்பிட்ட நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்கிறதா என்பதை கண்காணிக்க வந்திருந்த எம்.எல்.ஏ.,வை அரசு பஸ் டிரைவர் கண்டுகொள்ளாததால், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த 1995 செப்., 22 ல் இப்பிரச்னைக்காக தேவகோட்டை சப்-கலெக்டர் முன்னிலையில் கிராம மக்கள்,போக்குவரத்து அதிகாரிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் திருச்சி- ராமேஸ்வரம் எல்.எஸ்.எஸ்., பஸ்களை தவிர, மற்ற பஸ்களை நிறுத்திச் செல்வதென முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், உடன்பாட்டின் படி பஸ்கள் நிறுத்தப்படவில்லை. புதியதாக தேர்வு செய்யப்பட்ட காரைக்குடி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிச்சாமி, இப்பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தபோது, கிராம மக்கள் இப்பிரச்னையை அவரிடம் கூறினர். அதிகாரிகளுடன் பேசி, நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.
கடந்த வாரம் மனுநீதி நாள் கூட்டத்தில் கலெக்டர் ராஜராமனிடம் கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. கலெக்டரும் போக்குவரத்து கழக அதிகாரியிடம் விசாரித்தார். சமாதான கூட்டத்தில் முடிவு செய்து கையெழுத்திட்ட பின்பும், குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்த வில்லையெனில், சமாதான கூட்டத்தை ஏன் நடத்த வேண்டும், எனக் கேட்டார். உடன் நடவடிக்கை எடுப்பதாக கூறி, அதிகாரிகள் சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தேவகோட்டை வந்த எம்.எல்,ஏ, விடம் பஸ்கள் நிற்காத பிரச்னையை மக்கள் கூறினர். கிராம மக்களுடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற எம்.எல்.ஏ., பழனிச்சாமி, அங்கு ரோட்டோரத்தில் அமர்ந்து பஸ்கள் நின்று செல்கிறதா என்பதை கண்காணித்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் நிற்காமல் சென்றது. எம்.எல்.ஏ.,வும் பஸ்சை நிறுத்துமாறு சைகை காண்பித்தார். எனினும், பஸ்கள் நிற்கவில்லை. ஆத்திரமடைந்த கிராம மக்கள் எம்.எல்.ஏ., தலைமையில் மறியல் செய்ய முயன்ற போது, அங்கு வந்த போலீசார் சமரசம் செய்தனர். தங்களது 16 ஆண்டு கால பிரச்னையை எம்.எல்.ஏ., வால் கூட தீர்க்க முடியவில்லையே, என்று கிராம மக்கள் வேதனையடன் கலைந்து சென்றனர்.


