Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம்

ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம்

ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம்

ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம்

ADDED : ஜூலை 24, 2011 10:39 PM


Google News

கடலூர் : புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் நேற்று துவங்கியது.கடலூர், புதுப்பாளையம் செங்கமல தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் நேற்று துவங்கியது.

10 நாட்கள் உற்சவத்தில் தினமும் காலை 9 மணிக்கு கோதாதேவியாகிய ஆண்டாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 7 மணிக்கு ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் புறப்பாடு நடக்கிறது.வரும் 2ம் தேதி காலை 8 மணிக்கு ராஜகோபால சுவாமிக்கும், ஆண்டாளுக்கும் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. மாலை இந்திர விமானத்தில் பெருமாள் ஆண்டாள் சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி, பிரபு, நரசிம்மன் பட்டாச்சாரியார்கள், நிர்வாக அதிகாரி நாகராஜன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us