/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/சொகுசு கார்களில் உல்லாசம் : காதல் ஜோடிகளின் சில்மிஷம்சொகுசு கார்களில் உல்லாசம் : காதல் ஜோடிகளின் சில்மிஷம்
சொகுசு கார்களில் உல்லாசம் : காதல் ஜோடிகளின் சில்மிஷம்
சொகுசு கார்களில் உல்லாசம் : காதல் ஜோடிகளின் சில்மிஷம்
சொகுசு கார்களில் உல்லாசம் : காதல் ஜோடிகளின் சில்மிஷம்
அருமனை : சொகுசு கார்களில் வலம் வரும் காதல் ஜோடிகளின் எண்ணிக்கையும், சில்மிஷம்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமாரி, மாத்தூர் தொட்டிபாலம், திற்பரப்பு அருவி, பத்மனாபபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகளை அதிகளவு காணமுடிகிறது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் குமரி மாவட்ட சுற்றுலா தலங்களை விரும்பி பார்பது உண்டு. மேலும் அங்குள்ள காதல் ஜோடிகளும் இங்கு அடிக்கடி அடைக்கலம் அடைவதுண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை கேரள பதிவு எண் கொண்ட பைக்குகளில் இருதலையும், ஒரு உடலும் என்று தோன்றும் அளவிற்கு ஜோடிகள் பின்னி, பிணைந்தவாறு குமரி மாவட்ட ரோடுகளில் உல்லாச சவாரி செய்வதை காணமுடிந்தது. ஆனால் தற்போது இந்த பைக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு பதிலாக ஏ.சி., வசதியுள்ள சொகுசு கார்களை பலர் பயன்படுத்தி வருகின்றனர். கேரள பதிவு எண் கொண்டதும், உள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாத வண்ணம் கண்ணாடிகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, கண்ணாடி பூட்டப்பட்ட நிலையில் பல கார்கள் குமரியில் பறக்கிறது.
காதல் ஜோடிகள் சொகுசு கார்களில் உல்லாசமாக குமரிமாவட்டத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கார்களில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம் ஜோடிகள் அதிகளவு இருப்பதாகவும், சீருடையை கழற்றி காரில் வைத்து விட்டு, கலர் ஆடைகளை அணிந்து செல்வது வேதனையான விஷயம் என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்களுக்கு செல்லாமல் உல்லாசமாக காலை செல்லும் சவாரி மாலைக்குள் முடிந்து விடுகிறது என்றும், கார்களுக்குள் தனிமையில் இருக்கும் சில காதல் ஜோடிகள் பல்வேறு சில்மிஷன்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
சில வேளைகளில் ஆட்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சில செகுசு கார்கள் சில மணி நேரங்கள் நிற்பதையும் காணமுடிகிறது. மேலும் இவ்வாறு வரும் கார்களில் பள்ளி மாணவியர் வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற கார்களில் வரும் ஜோடிகளை கண்காணிக்கும் சில போலீசார் கண்டும் காணாமல் இருக்கின்றனர். இது போன்று குமரி மாவட்டத்தை சேர்ந்த பல கார்கள் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உலா வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் இளம் தலைமுறை சீரளிந்து போகவும், இதை பார்க்கும் மாணவ, மாணவியருக்கு மோசமான முன்னுதாரணமாக மாறிவிட வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே சொகுசு கார்களில் கண்ணாடிகளில் ஒட்டப்படும் கறுப்பு ஸ்டிக்கர்களை தடை செய்ய வேண்டும். அத்துமீறும் காதல் ஜோடிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


