Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பிளை ஆஷ் கல் உற்பத்தியாளர்கள் கடலூரில் உண்ணாவிரதம்

பிளை ஆஷ் கல் உற்பத்தியாளர்கள் கடலூரில் உண்ணாவிரதம்

பிளை ஆஷ் கல் உற்பத்தியாளர்கள் கடலூரில் உண்ணாவிரதம்

பிளை ஆஷ் கல் உற்பத்தியாளர்கள் கடலூரில் உண்ணாவிரதம்

ADDED : ஜூலை 25, 2011 11:02 PM


Google News

கடலூர் : பிளை ஆஷ் கல் உற்பத்தியாளர்கள் கடலூரில் உண்ணாவிரதம் இருந்தனர்.கடலூர் மாவட்டத்தில் இயங்கும் பிளை ஆஷ் பிரிக் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனத்திற்குத் தேவையான உலர் சாம்பலை முறையாக ஒதுக்கீடு செய்து வழங்காத என்.எல்.சி., நிர்வாகத்தை கண்டிப்பது.கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி., அனல் மின் நிலையத்திலிருந்து 100 கி.மீ., சுற்றளவிற்கு இயங்கும் பிளை ஆஷ் பிரிக் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பிளை ஆஷ் கல் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் இருந்தனர்.சங்கச் செயலர் துரைராஜ் தலைமை தாங்கினார்.

துணைச் செயலர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். கவுரவத் தலைவர் பாண்டியன், தலைவர் சதாசிவம், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us