/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை அரசு பணியாளருக்கு தமிழ் வளர்ச்சித்துறை பரிசுநெல்லை அரசு பணியாளருக்கு தமிழ் வளர்ச்சித்துறை பரிசு
நெல்லை அரசு பணியாளருக்கு தமிழ் வளர்ச்சித்துறை பரிசு
நெல்லை அரசு பணியாளருக்கு தமிழ் வளர்ச்சித்துறை பரிசு
நெல்லை அரசு பணியாளருக்கு தமிழ் வளர்ச்சித்துறை பரிசு
ADDED : ஜூலை 28, 2011 01:52 AM
திருநெல்வேலி : நெல்லையில் தமிழில் சீரிய முறையில் குறிப்புகள் எழுதிய பணியாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.அரசு அலுவலகங்களில் தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதும் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
2009ம்ஆண்டில் நெல்லை மாவட்ட நிலை அலுவலகப்பணியாளர்களில் சீரிய முறையில் தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதிய நெல்லை தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் சங்கர மகாதேவன் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார்.அவருக்கு 3 ஆயிரம் ரூபாய், சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.


