Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாற்றுத்திறனாளிகளுக்கு பாளை. யில் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு பாளை. யில் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு பாளை. யில் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு பாளை. யில் பயிற்சி

ADDED : ஜூலை 28, 2011 01:52 AM


Google News

திருநெல்வேலி : பாளை.

யில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.சீட் டிரஸ்ட், நபார்டு பாங்க் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழைநார் பொருட்கள், சானிட்டரி நாப்கின் தயாரித்தல் திறன் ஊக்கப்பயிற்சி நிறைவு விழா பாளை. யில் நடந்தது. மாற்றுத்திறனாளி நல அலுவலர் மனோகர் தலைமை வகித்தார்.அஸ்விந்த்ராஜ் வரவேற்றார். நபார்டு பாங்க் உதவி பொதுமேலாளர்கள் சுரேஷ், ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். தீயணைப்புத்துறை உதவி கோட்ட அலுவலர் குமரேசன், டீம் டிரஸ்ட் திருமலைமுருகன், பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி முதல்வர் சந்திரமோகன், நான்குநேரி பி.டி.ஓ., சுந்தரவடிவேலு, ஹாலிமேரி உட்பட பலர் பேசினர்.பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஸ்டெல்லா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை டிரஸ்ட் நிறுவனர் சுப்புலட்சுமி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us