/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையில் முதன்முதலாக "சோலார் சிக்னல்' துவக்கம்கோவையில் முதன்முதலாக "சோலார் சிக்னல்' துவக்கம்
கோவையில் முதன்முதலாக "சோலார் சிக்னல்' துவக்கம்
கோவையில் முதன்முதலாக "சோலார் சிக்னல்' துவக்கம்
கோவையில் முதன்முதலாக "சோலார் சிக்னல்' துவக்கம்
ADDED : ஜூலை 28, 2011 09:24 PM
கோவை : கோவை- அவிநாசிரோடு, பீளமேட்டில் சூரிய ஒளி சக்தியில் இயங்கும்
சோலார் சிக்னலை, மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி துவக்கி வைத்தார்.
கோவையில் அதிகரித்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும்
கூடிவருகிறது. முக்கிய ரோடுகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை
கட்டுப்படுத்த 44 சந்திப்புகளில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிக்னல்களில் 186 நவீன கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த காமிராக்கள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து
கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. தவிர, கண்காணிப்பு
காமிராக்கள் உதவியால் போக்குவரத்து விதி மீறும் வாகனங்கள் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் குற்றச்
செயல் களும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன. இச்சூழலில், கோவையில் முதன்முதலாக
அவிநாசி ரோடு, பீளமேட்டில், பி.எஸ்.ஜி., அறக்கட்டளை உதவியுடன், சோலார்
சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள
சிக்னலை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ்புஜாரி துவக்கி வைத்தார்.
கூடுதல் துணை கமிஷனர் காஜாமுகமது, உதவி கமிஷனர் அன்பழகன் ஆகியோர்
நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 800 மெகாவாட் மின்சக்தியை உள்ளடக்கும் இந்த
சிக்னல், இரண்டு நாட்கள் மின்சாரம் இன்றி செயல்படும். இதே போன்ற சிக்னல்
மேட்டுப்பாளையம் ரோட் டில் விரைவில் அமைக்கப்படும் என கமிஷனர்
தெரிவித்தார்.


