ADDED : ஜூலை 29, 2011 10:40 AM
திருப்பூர்: திருப்பூரில் மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.
திருப்பூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி தெய்வம் (40). இவரது மனைவி கருப்பாயி (30). அப்பகுதியைச் சேர்ந்த முருகனுக்கும் கருப்பாயிக்கு இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனை அறிந்த தெய்வம் கண்டித்துள்ளார். அதனை கேட்காததால் அத்திரம் அடைந்த தெய்வம் கருப்பாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். இதனை அறிந்த போலீசார் தெய்வத்தினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


