Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஐ.ஓ.பி., வங்கி சார்பில் இலவச தொழில் பயிற்சி

ஐ.ஓ.பி., வங்கி சார்பில் இலவச தொழில் பயிற்சி

ஐ.ஓ.பி., வங்கி சார்பில் இலவச தொழில் பயிற்சி

ஐ.ஓ.பி., வங்கி சார்பில் இலவச தொழில் பயிற்சி

ADDED : ஜூலை 31, 2011 01:02 AM


Google News

கரூர்: இந்தியன் ஓவர் சீஸ் வ ங்கி சார்பில் தொழில் பயிற்சி மு டித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இந்தாண்டு பவள விழா ஆண்டாக கொண்டாப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஊரக தொழில் முனைவோர் பயிற்சி மூலம் பல்வேறு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த விழாவில் அலைபேசி தொழிற்பயிற்சி முடித்த 24 பேருக்கு தொழிற்பயிற்சி சான்று வழங்கும் விழா நடந்தது. இதில் முதன்மை மண்டல மேலாளர் அன்பு பங்கேற்று சான்று வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மே லாளர் சந்திரசேகரன், பயிற்சி நிலைய இயக்குநர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களின் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய செய்வதற்காக இலவசமாகவே பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us