ADDED : ஆக 01, 2011 02:08 AM
மதுரை:மதுரை ஆனையூர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ஜீவா(18).
சட்டசபை தேர்தலின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, நேற்று முன் தினம்
இவரை தாக்கியதாக ஆனையூர் 1வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்
மருதுபாண்டியன்(34) உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல்,
மருதுபாண்டியன் தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில், ஜீவா உட்பட 6 பேரை
கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.