ADDED : ஆக 03, 2011 01:05 AM
ஓசூர்: பாகலூர் அருகே மணல் கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து இரு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்பாகலூர் போலீஸார்
மணல் கடத்தலை தடுக்க சொக்கநாதபுரம் என்னும் இடத்தில் திடீர் வாகன சோதனையில்
ஈடுப்பட்டனர். அப்போது, டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த
அப்பகுதியை சேர்ந்த பாப்பிரெட்டியை (30) போலீஸார் கைது செய்து டிராக்டரை
பறிமுதல் செய்தனர். அதே போல், மற்றொரு டிராக்டரில் மணல் கடத்தி வந்த
அப்பகுதியை சேர்ந்த மஞ்சுநாதரெட்டியையும் (24) போலீஸார் கைது செய்து
டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


