ADDED : ஆக 03, 2011 01:58 AM
உடுமலை : இந்தியன் போர்டு மற்றும் யோகா ஆராய்ச்சி மையம் சார்பில், அகில
இந்திய யோகாசனத்தேர்வில், முக்கோணத்தை சேர்ந்த மரகதம் யோகாலயம் மாணவ,
மாணவிகள் வெற்றி பெற்றனர்.
இந்தியன் போர்டு மற்றும் யோகா ஆராய்ச்சி மையம்
இணைந்து நடத்திய தேர்வில், 'மரகதம் யோகாலயம்', மாணவிகள் யோகாமணித்
தேர்வில், மாநிலத்தில் முதலிடம் பெற்றனர். மாணவி இலக்கியா 200
மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், பிரகாஷ், பரத் ஆகியோர் மாவட்டத்தில்
முதலிடமும், 2ம் வகுப்பு மாணவி அக்னி மரகதவர்ஷினி மாவட்டத்தில்
மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
யோகாலயத்தில் நடந்தது. யோகா ஆசிரியர் கார்த்திக் பிரகாஷ் வரவேற்றார்.
மரகதம் யோகாலயத்தின் நிர்வாகி மற்றும் யோகாசிரியர் குணசேகரன் பேசினார்.
வேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி வெற்றி
பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். யோகாலயத்தின் ஆலோசகர்
சத்தியபாமா நன்றி கூறினார்.


