Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுக்கு விரைவில் மூடு விழா : பொதுமக்கள் புகார்

நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுக்கு விரைவில் மூடு விழா : பொதுமக்கள் புகார்

நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுக்கு விரைவில் மூடு விழா : பொதுமக்கள் புகார்

நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுக்கு விரைவில் மூடு விழா : பொதுமக்கள் புகார்

ADDED : ஆக 04, 2011 01:28 AM


Google News

திருநெல்வேலி : நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு மூலம் புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமாக பாஸ்போர்ட் வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்த பிரிவு அலுவலகங்களில் புதிய பாஸ்போர்ட் பெறுதல், புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகள் நடந்தது. இதில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வந்தனர்.இந்நிலையில் நெல்லை உட்பட முக்கிய நகரங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் புதிய பாஸ்போர்ட், புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.புதிய சேவை மையம் தொடங்கப்பட்ட நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு 'களை' இழந்து காணப்படுகிறது. இதனால் ஒரு காலத்தில் கூட்டம் அலைமோதி காணப்பட்ட இப்பிரிவு தற்போது ஒரு சிலர் மட்டும் வந்து செல்கின்றனர்.



இதற்கிடையில் கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு மூலம் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது. இப்பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய பாஸ்போர்ட்கள் வழங்க மூன்று மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுவதால் இதனை அணுக பொதுமக்கள் தயங்கி வருகின்றனர்.புதியதாக ஆரம்பித்த பாஸ்போர்ட் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவில் போலீஸ் விசாரணை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்து பாஸ்போர்ட் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நாளடைவில் கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுக்கு 'மூடு விழா' நடத்த தற்போதே ஏற்பாடுகள் தயாராகி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.எனவே, கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு மூலம் புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கும் குறித்த காலத்தில் பாஸ்போர்ட் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us