திருவாடானை:திருவாடானை அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள்
நியமிக்கவேண்டும்.
பணியாளர் காலிப்பணியிடங்ளை நிரப்ப வேண்டும். குடிநீர்
வசதி, டாக்டர்கள் தங்குவதற்கு குடியிருப்பு வசதி, பிரேதபரிசோதனை அறையில்
மின் வசதி போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்கிஸ்ட் கம்யூ., சார்பில்
போராட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட
செயற்குழு உறுப்பினர் முத்துராமு, தாலுகா பொறுப்பாளர்கள் நாகநாதன், தனபால்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


