/உள்ளூர் செய்திகள்/சென்னை/சாலையை விரிவாக்கம் செய்வதில் அலட்சியம் : பொதுமக்கள் அவதிசாலையை விரிவாக்கம் செய்வதில் அலட்சியம் : பொதுமக்கள் அவதி
சாலையை விரிவாக்கம் செய்வதில் அலட்சியம் : பொதுமக்கள் அவதி
சாலையை விரிவாக்கம் செய்வதில் அலட்சியம் : பொதுமக்கள் அவதி
சாலையை விரிவாக்கம் செய்வதில் அலட்சியம் : பொதுமக்கள் அவதி
தாம்பரம் : நான்கு வழிச்சாலையான வேளச்சேரி சாலையில், சில இடங்களில் இரண்டு வழிப்பாதையே உள்ளது.
கடந்த ஆண்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் இறங்கினர். ஆனால், பெயருக்காக சில இடங்களில் மட்டும் அகற்றிவிட்டு, அப்படியே விட்டு விட்டனர்.சாலை குறுகியுள்ளதால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், புறநகரில் அதிக வாகனப் போக்குவரத்து கொண்ட, தாம்பரம் - வேளச்சேரி சாலை தினசரி நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. எனவே, இரண்டு வழிப்பாதை உள்ள இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.இது குறித்து, பெயர்கூற விரும்பாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'கிழக்கு தாம்பரத்தில் சாலையை விரிவாக்கம் செய்ய, நிலம் கையகப்படுத்துவது குறித்து, கலெக்டருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் இதற்கான நோட்டீஸ் வழங்கப்படும். அதன்பின், சாலை விரிவாக்கம் செய்யப்படும். சேலையூர், காமராஜ புரம் பகுதிகளிலும், சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


