Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தனியார் பஸ் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மூவர் பலி

தனியார் பஸ் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மூவர் பலி

தனியார் பஸ் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மூவர் பலி

தனியார் பஸ் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மூவர் பலி

ADDED : ஆக 07, 2011 12:56 AM


Google News

உத்தண்டி : கிழக்கு கடற்கரை சாலையில், தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மூவர், பரிதாபமாக இறந்தனர்.

இது தொடர்பாக, பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அடையாறு, பத்மநாபாநகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சுவாமிநாதன், 21. இவர், ராமாவரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில், மெக்கானிக்கல் பிரிவு நான்காம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, சுவாமிநாதன் தன்னுடன் படிக்கும் சகமாணவர்களான ஆதம்பாக்கம், மகாலட்சுமிநகரை சேர்ந்த விஜய், 21, ஈக்காட்டுதாங்கல், பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த விவேக்ராஜேந்திரன், 20, மற்றும் கோபாலபுரம், முதல் தெருவை சேர்ந்த விஜயேந்திரன், 20, ஆகியோருடன், மகாபலிபுரத்திற்கு காரில் புறப்பட்டனர். சுவாமிநாதன் காரை ஓட்டிச் சென்றார்.கிழக்கு கடற்கரை சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு, மாத வாடகையாக ஓடும் கிண்டியை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் பஸ் ஒன்றுஎதிரில் வந்தது.உத்தண்டி பகுதியில், தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. சுவாமிநாதன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.தகவலறிந்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, காரின் இடிபாட்டில் சிக்கிய விஜய், விவேக்ராஜேந்திரன் மற்றும் விஜயேந்திரன் ஆகியோரை மீட்டு, பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனை செல்லும் வழியில் விஜய் இறந்தார். தீவிர மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல், விவேக்ராஜேந்திரன் நேற்று இறந்தார். பலத்த காயங்களுடன், விஜயேந்திரன் உயிர் தப்பினார்.அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பஸ் டிரைவரான மரக்காணத்தை சேர்ந்த பூபாலன் என்பவரை கைது செய்து, கோர்ட் உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us