/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மலையில் தொடர் மழை : பீன்ஸ் விவசாயம் பாதிப்புமலையில் தொடர் மழை : பீன்ஸ் விவசாயம் பாதிப்பு
மலையில் தொடர் மழை : பீன்ஸ் விவசாயம் பாதிப்பு
மலையில் தொடர் மழை : பீன்ஸ் விவசாயம் பாதிப்பு
மலையில் தொடர் மழை : பீன்ஸ் விவசாயம் பாதிப்பு
ADDED : ஆக 11, 2011 12:55 AM
தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடர் மழையால், பீன்ஸ், குறு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களாக இம்மலைப்பகுதியில் கனமழை பெய்கிறது. இதுவரை 110.மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்ட முருங்கை, பட்டர் பீன்ஸ் ரகங்களில் பூ, பிஞ்சுகள் உதிர்ந்து, பூஞ்சை தாக்குதல் அதிகரித்துள்ளது. நாள் தோறும் பெய்யும் மழையால், குறுவிவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


