Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/கடலுக்குள் சென்ற 3 மீனவர்கள் மாயம்

கடலுக்குள் சென்ற 3 மீனவர்கள் மாயம்

கடலுக்குள் சென்ற 3 மீனவர்கள் மாயம்

கடலுக்குள் சென்ற 3 மீனவர்கள் மாயம்

ADDED : ஆக 12, 2011 12:51 AM


Google News

வேதாரண்யம்: வேதாரண்யத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் கரை திரும்பாததால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்தவர் கவிதாசன்(28). இவருக்கு சொந்தமான போட்டில் அதே பகுதியைச் சேர்ந்த ராமநாதன்(60), சிவா(27) ஆகிய மூவரும் கடந்த 10ம் தேதி மதியம் 12 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று காலை ஏழு மணியளவில் இவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். இவர்கள் திரும்ப வராததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் உறவினர்களும், அப்பகுதி மீனவர்களும் இரண்டு படகுகளுடன் நேற்று மதியம் 12 மணியளவில் கடலுக்குள் சென்றனர். மாயமான மூன்று மீனவர்களையும் கண்டுபிடிக்க முடியாததால் இரவு ஏழு மணியளவில் இவர்களும் கரை திரும்பி விட்டனர்.

மாயமான மூன்று மீனவர்களை கண்டுபிடித்து தரும்படி வேதாரண்யம் கடற்கரை போலீஸில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us