/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு பொருட்காட்சியில் முதல் நாள் வசூல் ரூ.92 ஆயிரம்அரசு பொருட்காட்சியில் முதல் நாள் வசூல் ரூ.92 ஆயிரம்
அரசு பொருட்காட்சியில் முதல் நாள் வசூல் ரூ.92 ஆயிரம்
அரசு பொருட்காட்சியில் முதல் நாள் வசூல் ரூ.92 ஆயிரம்
அரசு பொருட்காட்சியில் முதல் நாள் வசூல் ரூ.92 ஆயிரம்
ADDED : ஆக 12, 2011 01:25 AM
சேலம்: சேலத்தில், அரசு பொருட்காட்சி நுழைவுச் சீட்டு விற்பனை மூலம் முதல் நாளில், 92 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
சேலம் போஸ் மைதானத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பண்டிகையையொட்டி அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொருட்காட்சி, ஒரு வார காலதாமதத்துக்கு பின்னரே துவங்கப்பட்டது. இன்னும் அரங்குகள் பணி முழுமையடையவில்லை. துவக்க விழா முதல் பொதுமக்கள் இலவசமாக சென்று வர அனுமதியளிக்கப்பட்டது. தொடர்ந்து, 10ம் தேதி முதல் பெரியவர்களுக்கு 10 ரூபாய், சிறியவர்களுக்கு 5 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. முதல் நாளில், 8,361 பெரியவர்களும், 1,760 சிறியவர்களும் பொருட்காட்சியை பார்வையிட்டதன் மூலம் 92 ஆயிரத்து 410 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது, என மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.


