Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/திருமலையில் டாக்சி டிரைவர்கள் மீது போலீசார் தடியடி

திருமலையில் டாக்சி டிரைவர்கள் மீது போலீசார் தடியடி

திருமலையில் டாக்சி டிரைவர்கள் மீது போலீசார் தடியடி

திருமலையில் டாக்சி டிரைவர்கள் மீது போலீசார் தடியடி

ADDED : ஆக 12, 2011 04:44 AM


Google News
திருமலை: திருப்பதியில் புதிய போக்குவரத்து விதிமுறை அமலாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தனியார் டாக்ஸி டிரைவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி வெங்கடாஜல பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சாமி தரிசனம் முடித்துவிட்டு கீழ் திருப்பதி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்கின்றனர். இதற்கு தனியார் டாக்ஸிகள், ஜீப்புகளை வாடகைக்கு எடுத்து செல்கின்றனர். இதனால் திருப்பதியில் சாதாரண நாட்களில் தினசரி 3500 வாகனங்களும் , விஷேச நாட்களில் 7 ஆயிரம் வாகனங்களும் வந்து செல்கின்றன. இந்நிலையில் திருப்பதி ஏழுமலைப்பகுதிகளில் வாகனங்களில் வெளிவரும் புகை சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், அளவுக்கு அதிகமான வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் கூறி கோயில் நிர்வாகள் புதிய போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தியது. இதன்படி பேருந்துகளை தவிர குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே டாக்சி, ஜீப்புகளுக்கு அனுமதி அளிக்கின்றனர். அதுமட்டுமின்றி மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றிதழ் வைத்துள்ள சில டாக்சிகளைமட்டுமே அனுமதிக்கின்றனர். இதனால் வழக்கமாக வரும் தனியார் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அனுமதி தரமால் மறுத்ததுடன் புதிய போக்குவரத்து விதிமுறைகளால் தனியார் டாக்சி டிரைவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர். நேற்று புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்ஸி டிரைவர்கள் திருப்பதி தேவஸ்தான் நிர்வாக இணை அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்..ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் திடீரென கோஷம் எழுப்பியதால், போலீசாரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் டிரைவர்கள் மீது தடியடிநடத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us