/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சாம்பவர்வடகரை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அமைச்சர் நடவடிக்கைசாம்பவர்வடகரை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அமைச்சர் நடவடிக்கை
சாம்பவர்வடகரை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அமைச்சர் நடவடிக்கை
சாம்பவர்வடகரை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அமைச்சர் நடவடிக்கை
சாம்பவர்வடகரை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அமைச்சர் நடவடிக்கை
ADDED : ஆக 13, 2011 01:25 AM
கடையநல்லூர் : சாம்பவர்வடகரை துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட
சுகாதார நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்
செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர்
செந்தூர்பாண்டியன் கூறியதாவது: கடையநல்லூர் தொகுதியில் அமைந்துள்ள அரசு
ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள்
இருப்பு வைக்கும்படி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின்
வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக சுமார் 5
லட்ச ரூபாய் செலவில் மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டுமென தமிழக
சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. செங்கோட்டை,
கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் டாக்டர்கள் பணியிடங்கள்
அனுமதிக்க வேண்டும். சாம்பவர் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி
நேரமும் செயல்படக்கூடிய மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்திட
வேண்டுமென டவுன் பஞ்.,தலைவர் செல்வி, துணைத் தலைவர் மூர்த்தி மற்றும்
பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில்
தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலும் இதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதாரம்
மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென நகராட்சி
நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு செந்தூர் பாண்டியன்
தெரிவித்தார்.


