காந்தியின் வழியை பின்பற்றும் ஹசாரே : துஷார் காந்தி
காந்தியின் வழியை பின்பற்றும் ஹசாரே : துஷார் காந்தி
காந்தியின் வழியை பின்பற்றும் ஹசாரே : துஷார் காந்தி
ADDED : ஆக 17, 2011 07:09 PM
மும்பை : தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வழியை, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பின்பற்றுவதாக, காந்தியின் பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, காந்தியின் வழியை பின்பற்றும் ஹசாரேவுக்கு, அவருக்கு கிடைத்த வெற்றியைப் போல, இவருக்கும் நிச்சயம் மகத்தான வெற்றி கிடைக்கும். காந்தியின் போராட்டம், நண்பர்களுக்காக பகைவர்களை எதிர்த்து போராடினார். ஹசாரேவின் போராட்டம், எதிரிகளிடமிருந்து (ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து) நாட்டை காப்பாற்றவதாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.


