/உள்ளூர் செய்திகள்/தேனி/மூணாறில் 8 செ.மீ., மழை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்குமூணாறில் 8 செ.மீ., மழை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
மூணாறில் 8 செ.மீ., மழை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
மூணாறில் 8 செ.மீ., மழை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
மூணாறில் 8 செ.மீ., மழை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
ADDED : ஆக 18, 2011 09:33 PM
மூணாறு:மூணாறில் பெய்த மழையினால், ஆத்துக்காடு நீர் வீழ்ச்சியில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மூணாறில் ஆண்டு தோறும் ஜூனில் தொடங்கும் பருவ
மழை செப்டம்பர் வரை நீடிக்கும்.
ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் மழை குறைந்து
காணப்படும்.கடந்த சில நாட்களாக மழை குறைந்து, வெயில்
காணப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்தது.
இரவு முழுவதும் விடாமல் பெய்த மழை நேற்று காலை 10 மணி வரை நீடித்தது. (8
செ.மீ., மழைபதிவு). முதிரைப்புழை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து, மூணாறு
அருகே உள்ள ஆத்துக்காடு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பயணிகள் வராததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் பணிக்கு செல்ல இயலவில்லை.


