Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுபி.எஸ்.என்.எல்.,சிறப்பு சலுகைபொது மேலாளர் தகவல்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுபி.எஸ்.என்.எல்.,சிறப்பு சலுகைபொது மேலாளர் தகவல்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுபி.எஸ்.என்.எல்.,சிறப்பு சலுகைபொது மேலாளர் தகவல்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுபி.எஸ்.என்.எல்.,சிறப்பு சலுகைபொது மேலாளர் தகவல்

ADDED : ஆக 18, 2011 10:03 PM


Google News
காரைக்குடி:ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் ரூ. 786க்கு 'ரீசார்ஜ்' செய்தால், முழுமையாக பேசிக்கொள்ளும் (புல் டாக்டைம்) சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல்.,பொது மேலாளர் ராஜம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்.,தொலை தொடர்பு சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரம்ஜான் பண்டிகையை காலத்தில் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,ரூ.786க்கு 'ரீசார்ஜ்' செய்தால், அதே தொகைக்கு அவர்கள் பேசிக்கொள்ளலாம். இச்சலுகை செப்., 10 வரை மட்டுமே. அதேபோல் இன்றும்(ஆக.19), நாளையும் இரண்டு நாட்கள் மட்டும் 100 முதல் 1,100 வரை 'டாப் அப்' செய்பவர்கள் சிறப்பு சலுகையாக'புல் டாக்டைம்' (முழு நேரம் பேசும் வசதி) பேசிக்கொள்ளலாம்.

அதேபோல், 300 ரூபாய்க்கு மேல் ஐ.டி.சி., கார்டுகள் 'ரீசார்ஜ்' செய்பவர்கள் 30 ரூபாய் வரை கூடுதலாக பேசிக்கொள்ளலாம். இச்சலுகை, ஆக., 31 வரை மட்டுமே. தவிர, ஜூன் 27 முதல் செப்., வரை ஐ.டி.சி., கார்டுகள் 'ரீசார்ஜ்' ö சய்பவர்கள் அமெரிக்கா, கனடா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விநாடிக்கு 3 பைசா, பாகிஸ்தான், பாரீஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளுக்கு வினாடிக்கு 10 பைசா குறைந்த கட்டணத்தில் பேசிக் கொள்ளும் வசதி, தற்போது நடைமுறையில் உள்ளது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us