ADDED : ஆக 19, 2011 01:46 AM
திருநெல்வேலி:தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ் பழமர சாகுபடியாளர்களுக்கு பாரமரிப்பு மானியத்தை மனுநீதிநாள் முகாமில் கலெக்டர் செல்வராஜ் வழங்கினார்.
செங்கோட்டை வட்டாரம் இலத்தூர், கடையநல்லூர் நெடுவயல் கிராமங்களுக்கான மனுநீதிநாள் முகாம் அச்சன் புதூரில் நடந்தது. இதில் தோட்டக் கலை இயக்கத்தின் சார்பில் மாங்கன்றுகளை பெற்று 3 ஆண்டுகளாக பராமரித்து வரும் ஷீஜராஜிக்கு ரூ.1745 வழங்கப்பட்டது. மாரியப்பனுக்கு ரூ.1875 வழங்கப்பட்டது.
தோட்டக் கலைத்துறை திட்டங்கள், மானிய உதவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை விளக்கும் கருத்துக் காட்சி தோட்டக் கலைத்துறையால் அமைக்கப்பட்டிருந்தது.தோட்டக் கலை விவசாயிகளும்,கிள்ளிகுளம் வேளா ண்மை கல்லூரி மாணவிகளும் கண்காட்சியை பார்த்து ரசித்தனர்.
கருத்துக் கண்காட்சியை தோட்டக் கலை துணை இயக்குனர் ராஜன் ரவிச்சந்திரன் வழிகாட்டுதல்படி உதவி இயக்குனர் கள் பாலசுப்பிரமணியன், குணசேகரன், உதவிஅலுவலர்கள் கோவிந்தராஜன்,முருகன்,பாலச்சந்தர், ஹரிஹரன், முத் தையா தனராஜ், செல்வக்குமார் அமைத்திருந்தனர்.இத்தகவலை தோட்டக் கலை உதவி இயக்குனர் பாலசுப்பிர மணியன் தெரிவித்தார்.


