Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருவள்ளுவர் அறக்கட்டளையில் கல்வி உதவித் தொகை வழங்கல்

திருவள்ளுவர் அறக்கட்டளையில் கல்வி உதவித் தொகை வழங்கல்

திருவள்ளுவர் அறக்கட்டளையில் கல்வி உதவித் தொகை வழங்கல்

திருவள்ளுவர் அறக்கட்டளையில் கல்வி உதவித் தொகை வழங்கல்

ADDED : ஆக 19, 2011 02:37 AM


Google News
புதுச்சேரி:திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா தமிழ் சங்கத்தில் நடந்தது.சிவக்குமார் வரவேற்றார்.

கவுரவ தலைவர் பெரியாண்டி தலைமை தாங்கினார். நிறுவனர் சரவணன், பூபாலன் உரையாற்றினார்.பல்வேறு கிராமங்களை சேர்ந்த 20 கல்லூரி மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. புதுச்சேரிக்கு உட்பட்ட 15 மீனவ கிராமங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 2 மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.விழாவில் மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ., பல்கலைக்கழக இயக்குனர் ராமதாஸ், முன் னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண் டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us