Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அதிகாலை தீ விபத்தில் ரூ.2 லட்சம் மருந்து நாசம்

அதிகாலை தீ விபத்தில் ரூ.2 லட்சம் மருந்து நாசம்

அதிகாலை தீ விபத்தில் ரூ.2 லட்சம் மருந்து நாசம்

அதிகாலை தீ விபத்தில் ரூ.2 லட்சம் மருந்து நாசம்

ADDED : ஆக 21, 2011 11:52 PM


Google News
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புடைய மருந்து, மாத்திரைகள் எரிந்து நாசமாகின.கோவை அரசு மருத்துவமனையில் தினமும் ஏழாயிரம் பேர் உள் நோயாளிகளாவும், வெளி நோயளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

இவர்க ளுக்கு வழங்குவ தற்காக பல லட்சம் ரூபாய் மதிப் புள்ள மருந்து, மாத்திரை கள் பிரம்மாண்ட குடோ னில் இருப்பில் உள்ளன. நேற்று அதிகாலை நான்கு மணிக்கு மருந்து குடோனில் தீப்பற்றி பெரும்புகை கிளம்பியதால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, மேலும் பரவாமல் தடுத்தனர். எனினும், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 26 வகை மருந்து, மாத்திரைகள் தீயில் நாசமாகின.தகவல் அறிந்த தமிழக தொழில்துறை அமைச்சர் வேலுமணி, நேற்று மதியம் மருத்துவமனைக்கு வந்து, தீ விபத்து நடந்த குடோனை பார்வையிட்டார். நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இன்றி மருந்து, மாத்திரை வழங்க ஆலோசனை வழங்கினார். நிருபர்களிடம் அமைச்சர் கூறும்போது, ''கோவை அரசு மருத்துவமனையில் விரைவில் நவீன இருதய சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக மாற்றுப்பிரிவுகள் துவக்கப்படும். இதுபற்றி தமிழக முதல்வரின் ஆலோசனை பெறப்படும்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us