சிறுவனை கடத்திய 6 பேருக்கும் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தருவோம் : தூத்துக்குடி எஸ்.பி., உறுதி
சிறுவனை கடத்திய 6 பேருக்கும் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தருவோம் : தூத்துக்குடி எஸ்.பி., உறுதி
சிறுவனை கடத்திய 6 பேருக்கும் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தருவோம் : தூத்துக்குடி எஸ்.பி., உறுதி

தூத்துக்குடி : ''ரூ.
தூத்துக்குடி, பிரையண்ட் நகர் ஷிப்பிங் கம்பெனி உரிமையாளர் ராஜ்குமார். இவரது மனைவி பிளவர், மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர், சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். எல்.கே.ஜி., படிக்கும் இவர்களது நான்கரை வயது மகன் விஷால் உமேஷ்,கடந்த 17ம்தேதி காலை இவர்களது காரில் பள்ளிக்கு சென்ற போது கடத்தப்பட்டான். அக்காரை ஓட்டிய இவர்களது டிரைவர் பாலகருப்பசாமியும் சேர்ந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. 10க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் தேடிவந்தபோதும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், 18ம் தேதி இரவு மதுரை விமான நிலையம் அருகே வந்து பணத்தை கொடுத்து சிறுவனை கூட்டிச்செல்லுமாறு, பெற்றோருக்கு மீண்டும் போன் வந்தது. இதையடுத்து அவனது பெற்றோர்கள், எஸ்.பி., ஆகியோர் அன்று காரில் மதுரை புறப்பட்டனர். அவர்கள் எட்டயபுரம் அருகே சென்றபோது, கார் டிரைவர் பாலகருப்பசாமி, சிறுவன் விஷால் உமேஷ் தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவு 8.40க்கு வந்த தகவல் கிடைத்தது. கடத்தல்காரர்கள் தங்களை காரிலிருந்து இறக்கிவிட்டதாக டிரைவர் தெரிவித்தார். ஆனால், அதை நம்பாத போலீசார் அவரிடம் 'முறைப்படி' விசாரித்ததில், பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு நண்பர்களுடன் சேர்ந்து, சிறுவனை கடத்தி நாடகமாடியதாக ஒப்புக்கொணடார்.
இதையடுத்து பாலகருப்பசாமி, கடத்தலில் அவருக்கு உதவிய நண்பர்கள் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் மாரிமுத்து(எ) அசோக், மொபைல் போனில் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டிய ஜமின்நல்லமலை மகேஷ் மற்றும் பெருங்குளம் லட்சுமிகாந்தன் ஆகிய நால்வர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் நடவடிக்கைகளை கண்காணித்து இவர்களுக்கு தகவல் கொடுத்த கிருஷ்ணராஜபுரம் ஜெகந்நாதன், பிரையண்ட் நகர் முருகேசன் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 பைக்குகள், 3 கத்திகள், 3 மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசை திசைதிருப்பவே,பைக்குகளில் பல ஊர்களுக்கும் சென்று அங்கிருந்து மொபைலில் பேசியுள்ளனர். போலீசார் நெருங்கியதால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டது. எனவே, திட்டத்தை பாதியில் கைவிட்டனர். இதனையடுத்து, கார் டிரைவர் பாலகருப்பசாமி, சிறுவன் விஷால் உமேசுடன் போலீஸ் ஸ்டேஷன் திரும்பினார். மற்றபடி, இக்கடத்தலுக்கு வேறு எந்தகாரணமும் கிடையாது. இவர்களை பிடிக்க சிறுவன் பெற்றோர் கார் டிக்கியில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் 4 மணி நேரம் இருந்துள்ளார் ஆனால், அவர்கள் தப்பியோடிவிட்டனர். இச்சிறுவன் கடத்தலில் ஈடுபட்ட ஆறுபேருக்கும் கோர்ட்டில் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தருவோம். பலமுறை விசாரித்த பின்னரே, கார் டிரைவரை பணிக்கு அமர்த்த வேண்டும். இனி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்'' என்றார். ஏ.எஸ்.பி., சோனல்சந்திரா, போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.


