Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : ஆக 26, 2011 12:09 AM


Google News

கடலூர் : கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து சி.இ.ஓ., அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்குவதற்குரிய தேர்வு வரும் நவம்பர் 20ம் தேதி கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய நகரங்களில் நடக்கிறது. தற்போது 8ம் வகுப்பு படிப்பவர்கள், 7ம் வகுப்பு தேர்வில் எஸ்.சி,-எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்ணும், பிற மாணவர்கள் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் 1,50,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று தேர்வு கட்டணத்தை ஒரே சலானின் செலுத்தி விண்ணப்பத்துடன் மாவட்ட கல்வி அலுவலகத்தில் வரும் 30ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us