/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருட்டு வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைதுதிருட்டு வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது
திருட்டு வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது
திருட்டு வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது
திருட்டு வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஆக 27, 2011 10:56 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பல திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிங்கம்புணரி நாடார் பேட்டை முத்து மகன் ஜெய்கணேஷ், 31.இவர் மீது வீடு புகுந்து திருடுதல், நகை பறித்தல் வழக்குகள் சிங்கம்புணரி,உலகம்பட்டி,புழுதிபட்டி போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஒரு வழக்கில் தண்டனை பெற்று புதுக்கோட்டை சிறையில் உள்ளார்.திருப்புத்தூர் டி.எஸ்பி.,மதுரைச்சாமி, சிவகங்கைமாவட்ட எஸ்.பி.,பன்னீர்செல்வம் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ராஜாராமன், ஜெய்கணேஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் சுகுமாறன்.எஸ்.ஐ., பூமிநாதன் ஆகியோர், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.


