இலவச லேப்டாப் பெறும் மாணவர்கள் பட்டியல்:தமிழக அரசு அறிவிப்பு
இலவச லேப்டாப் பெறும் மாணவர்கள் பட்டியல்:தமிழக அரசு அறிவிப்பு
இலவச லேப்டாப் பெறும் மாணவர்கள் பட்டியல்:தமிழக அரசு அறிவிப்பு
ADDED : ஆக 27, 2011 11:49 PM
சென்னை:மாணவ, மாணவியருக்கான இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்தில், ஆண்டு வாரியாக பயன்பெறும் மாணவ, மாணவியர் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை வெளியிட்ட அரசாணை:தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்-டாப் திட்டம், வரும் 15ம் தேதி முதல்வரால் துவக்கப்படும். இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் என, நடப்பு நிதியாண்டில், 9.12 லட்சம் பேருக்கு, இலவச லேப்-டாப்கள் வழங்கப்படும். இதற்காக, நடப்பாண்டில், 912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான பணிகளை, தமிழக எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் (எல்காட்) மேற்கொள்ளும். இதில், கல்வியாண்டு வாரியாக பயன்பெறும் மாணவ, மாணவியர் விவரம்:
கல்வி நிறுவனம் 2011-12 2012-13 2013-14:பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பிளஸ் 2 பிளஸ் 2
அரசு கலை அறிவியல் கல்லூரிகள் முதல் மற்றும் 3ம் ஆண்டு மூன்றாம் ஆண்டு -
பாலிடெக்னிக் கல்லூரிகள் முதல் மற்றும் 3ம் ஆண்டு முதல் மற்றும் 3ம் ஆண்டு முதலாம் ஆண்டுபொறியியல் கல்லூரிகள் இரண்டு மற்றும் 4ம் ஆண்டு இரண்டு மற்றும் 4ம் ஆண்டு -
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 2013-14ல், அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் லேப்-டாப் பெற்று விடுவர் என்பதால், அதன்பின் கல்லூரியில் லேப்-டாப் வழங்க வேண்டிய தேவை இல்லை. அதேநேரம், 10ம் வகுப்பு முடித்து விட்டு, பாலிடெக்னிக் சேரும் மாணவர்களுக்கு மட்டும் முதலாமாண்டில், லேப்-டாப் வழங்கப்படும் என, தெரிகிறது.


