ADDED : ஆக 28, 2011 12:07 AM
விழுப்புரம் : கண்டமங்கலம் அடுத்த கலித்தீர்த்தான்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால முருகன், 27.
இவரது மனைவி செம்பியான் பாளையம் கிராமம் தாட்சி யாழிணி 26. இவர் ஆறு மாதம் கர்பமாக உள்ளதால் தாய் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் பாலமுருகன் மனைவியை பார்க்க செம்பியான்பாளையத்திற்கு பைக்கில் சென்றார். கண்டமங்கலம் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் மோதி காயமடைந்தார். சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


