/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பி.எப்., குறைதீர்ப்பு கூட்டம் வரும் செப்., 12ல் நடக்கிறது :புகார் அனுப்ப கடைசி நாள் செப்.,5பி.எப்., குறைதீர்ப்பு கூட்டம் வரும் செப்., 12ல் நடக்கிறது :புகார் அனுப்ப கடைசி நாள் செப்.,5
பி.எப்., குறைதீர்ப்பு கூட்டம் வரும் செப்., 12ல் நடக்கிறது :புகார் அனுப்ப கடைசி நாள் செப்.,5
பி.எப்., குறைதீர்ப்பு கூட்டம் வரும் செப்., 12ல் நடக்கிறது :புகார் அனுப்ப கடைசி நாள் செப்.,5
பி.எப்., குறைதீர்ப்பு கூட்டம் வரும் செப்., 12ல் நடக்கிறது :புகார் அனுப்ப கடைசி நாள் செப்.,5
ADDED : ஆக 29, 2011 12:06 AM
கோவை : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், பி.எப்.,
குறைதீர்ப்பு கூட்டம் செப்.,12ல் நடக்கிறது; புகார் அனுப்ப வேண்டிய கடைசி
நாள் செப்.5., என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: கோவை, பாலசுந்தரம்
ரோட்டிலுள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில்
'பவிஸ்ய நிதி அதாலத்' (பி.எப்., குறைதீர்ப்பு கூட்டம்) வரும் செப்.,12ம்
தேதி காலை 11.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடக்கிறது.
மண்டல பி.எப்.,
கமிஷனர் (இரண்டம் நிலை) அமுதா தலைமை வகிக்கிறார். தொழிலாளர் வைப்பு நிதி,
ஓய்வூதியம், காப்பீட்டு முதலீட்டில் இழப்பீடு பெறுதல் உள்ளிட்ட பிரச்னைகள்
குறித்து கமிஷனரிடம் நேரில் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். 'பவிஸ்ய நிதி
அதாலத்' நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் நிறுவனத்தின் பெயர்,
முகவரி, இ.பி.எப்., (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண்), புகார் விவரம்
குறித்த தகவல்கள் அடங்கிய கடிதத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன
மண்டல அலுவல கமிஷனர் (முதல்நிலை) வர்கீஸ் அல்லது மக்கள் தொடர்பு
அதிகாரியிடம் வரும் செப்., 5ம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப
வேண்டும். தபால் கவர் முன்புறம் 'பவிஸ்ய நிதி அதாலத்' என எழுதியிருக்க
வேண்டும். ணூணி.ஞிணிடிட்ஞச்tணிணூஞு÷ஞுணீஞூடிணஞீடிச்.ஞ்ணிதி.டிண என்ற
இ-மெயில் முகவரியிலும் புகார்களை அனுப்பலாம். இவ்வாறு, அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


