/உள்ளூர் செய்திகள்/தேனி/பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி : கவுன்சிலர் வலியுறுத்தல்பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி : கவுன்சிலர் வலியுறுத்தல்
பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி : கவுன்சிலர் வலியுறுத்தல்
பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி : கவுன்சிலர் வலியுறுத்தல்
பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி : கவுன்சிலர் வலியுறுத்தல்
ADDED : ஆக 30, 2011 12:45 AM
பெரியகுளம்:பெரியகுளம் பாதாளசாக்கடை திட்டத்திற்கு நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சீத்தாலட்சுமி தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் அப்துல்சமது, மேலாளர் ரங்கநாயகி, சுகாதார ஆய்வாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:
கே.ராஜா: நகராட்சியில் விநியோகிக்கும் குடிநீரில் தூய்மை இல்லை. பெரியகுளத்திற்கு பேரிஜம் ஏரியிலிருந்து குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் சுத்தமாக விநியோகிக்க வேண்டும்.
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
முகமதுசலீம்: முதல்வர் ஜெயலலிதா பெரியகுளம் பாதாளசாக்கடை புதுப்பிக்கும் திட்டத்திற்கு சட்டசபைக்கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மருதைதுரை: சுதந்திரவீதியில் இடிந்து விழும் நிலையில் பெண்கள் கழிப்பிட கட்டடம் கட்ட டெண்டர் விட்டு பல மாதங்களாகிறது. இதுவரை நடவடிக்கை இல்லை.
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
ரஜாக்: எல்.ஐ.சி., கட்டடதிற்கு வாடகைக்கு இடம் பார்த்து வருகின்றனர். காலியாக உள்ள நகராட்சி கட்டடத்தை வாடகைக்கு கொடுத்தால் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.
தலைவர்: ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


