ADDED : ஆக 30, 2011 12:54 AM
வானூர் : அடையாளம் தெரியாத வாலிபர் கிணற்றில் இறந்து கிடந்தார்.
திண்டிவனம் அடுத்த அருவாப்பாக்கம் கிராமத்தில் நெடுஞ்சாலையையொட்டி கலைமகள் சபா நிறுவனத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. வி.ஏ.ஓ., ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


