ADDED : செப் 04, 2011 02:23 AM
கள்ளக்குறிச்சி:விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி
தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக் கள் வழங்கப்பட்டது.விழுப்புரம் தெற்கு
மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மோகன்
எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு, மாவட்ட அவைத்
தலைவர் பச்சையாப் பிள்ளை, அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன்,
ஜெ., பேரவை செயலாளர் ஞானமூர்த்தி, நகர செயலாளர் பாபு முன்னிலை
வகித்தனர்.ஒன்றிய செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். மாவட்ட தேர்தல்
பொறுப்பாளர் கலைமணி விருப்ப மனுக்கள் வழங்கி துவக்கி வைத்தார். மாவட்ட
பொருளா ளர் சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர் அரசு, எம்.ஜி.ஆர்., மன்ற
செயலாளர் தங்கபாண்டியன், வக்கீல் பிரிவு செயலாளர் சீனுவாசன், குபேந்திரன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.


