/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விநாயகர் ஊர்வலத்துக்கு பாதுகாப்பு 178 சிலைகள் இன்று கரைப்புவிநாயகர் ஊர்வலத்துக்கு பாதுகாப்பு 178 சிலைகள் இன்று கரைப்பு
விநாயகர் ஊர்வலத்துக்கு பாதுகாப்பு 178 சிலைகள் இன்று கரைப்பு
விநாயகர் ஊர்வலத்துக்கு பாதுகாப்பு 178 சிலைகள் இன்று கரைப்பு
விநாயகர் ஊர்வலத்துக்கு பாதுகாப்பு 178 சிலைகள் இன்று கரைப்பு
ADDED : செப் 04, 2011 11:40 PM
கோவை : கோவையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 178 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக
கொண்டு செல்லப்பட்டு,முத்தண்ணன் குளத்தில் இன்று விசர்ஜனம்
செய்யப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை மாநகரில்
பொதுமக்கள் வழிபாட்டுக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் கடந்த மூன்று
நாட்களாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குளங்களில் விசர்ஜனம்
செய்யப்படுகின்றன. கோவையில் பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில்
315 விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டன. நேற்று முன்தினம்
குறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் உள்ள குறிச்சிக்குளத்தில் 115 சிலைகள்
விசர்ஜனம் செய்யப்பட்டன. இரண்டாவது நாளான நேற்று ரேஸ்கோர்ஸ் மற்றும்
காந்திபுரம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 விநாயகர் சிலைகள்
வெள்ளக்கிணறு பகுதியில் கரைக்கப்பட்டன. மூன்றாவது நாளான இன்று, இந்து
அமைப்புகள் சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 178
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, முத்தண்ணன்குளத்தில்
விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இதேபோல், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பேரூர்
மற்றும் வால்பாறை பகுதிகளில் நேற்று 267 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
செய்யப்பட்டன. நூற்றுக் கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.
ஊர்வலத்தின்போதுஅதிகளவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.


