ADDED : செப் 06, 2011 10:06 PM
சென்னை: குவைத்திலிருந்து 126 பயணிகளுடன் வந்த விமானம் கோவாவில் டயர் வெடித்தது.
விமானி சமார்த்தியமாக விமானத்தை தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து பழுது பார்க்கப்பட்டு 12 மணி நேர தாமதத்திற்கு பின்னர் பயணிகள் அனைவரும் நலமுடன் சென்னை வந்தனர்.


