ADDED : செப் 06, 2011 10:11 PM
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த ராமநத்தம் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, அரிமா சங்கம், ரெட் ரிப்பன்ஸ் கிளப் இணைந்து நடத்திய முகாமிற்கு கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் ராஜன், ராஜபிரதாபன், கல்லூரி முதல்வர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் செல்வராஜ் வரவேற்றார். முகாமில் திட்டக்குடி டி.எஸ்.பி., வனிதா ரத்ததானம் செய்தார். டாக்டர் சிவகுரு தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாமை நடத்தினர். டாக்டர் சுப்பையா, ஆர்.ஆர்.சி., மாவட்டத் தலைவர் கதிரவன், அரிமா சங்க ஒருங்கிணைப்பாளர் துரைராஜ், கல்லூரி முதல்வர்கள் நீலமேகம், சக்திவேல் பங்கேற்றனர்.


